PSA

Psalm 62

Title

לַמְנַצֵּ֥חַ עַֽל יְדוּת֗וּן מִזְמ֥וֹר לְדָוִֽד

IRV

எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

1தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது;

அவரால் என் இரட்சிப்பு வரும்.

2அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும்,

என் உயர்ந்த அடைக்கலமுமானவர்;

நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை.

3நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள்,

நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள்,

சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.

4அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே

அவர்கள் ஆலோசனைசெய்து,

பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து,

தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள்.

(சேலா)

5என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு;

நான் நம்புகிறது அவராலே வரும்.

6அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும்,

என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்;

நான் அசைக்கப்படுவதில்லை.

7என்னுடைய இரட்சிப்பும்,

என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது;

பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.

8மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;

அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்;

தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா)

9கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே;

தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும்

மாயையிலும் லேசானவர்கள்.

10கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்;

செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள்.

11தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்;

வல்லமை தேவனுடையது என்பதே.

12கிருபையும் உம்முடையது, ஆண்டவரே!

தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர்.

Matthew Henry's chapter overview

Introduction

Psalms 62

This psalm has nothing in it directly either of prayer or praise, nor does it appear upon what occasion it was penned, nor whether upon any particular occasion, whether mournful or joyful. But in it, I. David with a great deal of pleasure professes his own confidence in God and dependence upon him, and encourages himself to continue waiting on him (Psa 62:1-7). II. With a great deal of earnestness he excites and encourages others to trust in God likewise, and not in any creature (Psa 62:8-12). In singing it we should stir up ourselves to wait on God.

To the chief musician, to Jeduthun. A psalm of David.

Cross-references: Ps 62:1 · Ps 62:8