Psalm 147
IRV
1யெகோவாவை துதியுங்கள்;
நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது,
துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.
2யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்;
துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.
3இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்,
அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
4அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,
அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.
5நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்;
அவருடைய அறிவு அளவில்லாதது.
6யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்;
துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.
7யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்;
நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.
8அவர் வானத்தை மேகங்களால் மூடி,
பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி,
மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.
9அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
10அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்;
வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.
11தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல்
யெகோவா பிரியமாக இருக்கிறார்.
12எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்;
சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
13அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,
உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
14அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி,
செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
15அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்;
அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.
16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்;
சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
17அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்;
அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;
தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
19யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும்,
இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
20அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை;
அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள்.
அல்லேலூயா.
Introduction
Psalms 147
This is another psalm of praise. Some think it was penned after the return of the Jews from their captivity; but it is so much of a piece with Ps. 145 that I rather think it was penned by David, and what is said (Psa 147:2, Psa 147:13) may well enough be applied to the first building and fortifying of Jerusalem in his time, and the gathering in of those that had been out-casts in Saul's time. The Septuagint divides it into two; and we may divide it into the first and second part, but both of the same import. I. We are called upon to praise God (Psa 147:1, Psa 147:7, Psa 147:12). II. We are furnished with matter for praise, for God is to be glorified, 1. As the God of nature, and so he is very great (Psa 147:4, Psa 147:5, Psa 147:8, Psa 147:9, Psa 147:15-18). 2. As the God of grace, comforting his people (Psa 147:3, Psa 147:6, Psa 147:10, Psa 147:11). 3. As the God of Israel, Jerusalem, and Zion, settling their civil state (Psa 147:2, Psa 147:13, Psa 147:14), and especially settling religion among them (Psa 147:19, Psa 147:20). It is easy, in singing this psalm, to apply it to ourselves, both as to personal and national mercies, were it but as easy to do so with suitable affections.
Cross-references: Ps 147:2 · Ps 147:13 · Ps 147:1 · Ps 147:7 · Ps 147:12 · Ps 147:4 · Ps 147:5 · Ps 147:8 · Ps 147:9 · Ps 147:15 · Ps 147:3 · Ps 147:6 · Ps 147:10 · Ps 147:11 · Ps 147:14 · Ps 147:19 · Ps 147:20