PRO

Proverbs 19

IRV

ஞானம் நன்மைகளின் ஊற்று

1மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட,

உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன்.

2ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல;

கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.

3மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்;

என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.

4செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்;

தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.

5பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்;

பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.

6பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்;

கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.

7தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே,

எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்;

அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான்,

அவைகளோ வெறும் வார்த்தைகளே.

8ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்;

புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.

9பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்;

பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.

10மூடனுக்குச் செல்வம் தகாது;

பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.

11மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்;

குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்;

அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.

13மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்;

மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.

14வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து;

புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.

15சோம்பல் தூங்கிவிழச்செய்யும்;

அசதியானவன் பட்டினியாக இருப்பான்.

16கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்;

தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.

17ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்;

அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

18நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி;

ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.

19கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்;

நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.

20உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி,

ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.

21மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்;

ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.

22நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு;

பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.

23யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது;

அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்;

தீமை அவனை அணுகாது.

24சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து,

அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.

25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்;

புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.

26தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன்,

வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.

27என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும்

போதகங்களை நீ கேட்காதே.

28அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்;

துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.

29பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும்,

மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.

Matthew Henry's chapter overview

Introduction

Proverbs 19

Here see, 1. What will be the credit and comfort of a poor man, and make him more excellent than his neighbour, though his poverty may expose him to contempt and may dispirit him. Let him be honest and walk in integrity, let him keep a good conscience and make it appear that he does so, let him always speak and act with sincerity when he is under the greatest temptations to dissemble and break his word, and then let him value himself upon that, for all wise and good men will value him. He is better, has a better character, is in a better condition, is better beloved, and lives to better purpose, than many a one that looks great and makes a figure. 2. What will be the shame of a rich man, notwithstanding all his pomp. If he have a shallow head and an evil tongue, if he is perverse in his lips and is a fool, if he is a wicked man and gets what he has by fraud and oppression, he is a fool, and an honest poor man is to be preferred far before him.